Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராசிபுரம் ஸ்ரீ எல்லை மாரியம்மன் கோவிலில் 108 சங்காபிஷேகம் 

ஜுலை 22, 2023 01:19

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ எல்லை மாரியம்மன் திருக்கோவில் உள்ளது.

இக்கோவிலில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு ஸ்ரீ எல்லை மாரியம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்று தங்கக்காப்பு அலங்காரம் சாத்தப்பட்டு, ஸ்ரீ எல்லை மாரியம்மனுக்கு மகாதீபானையும் நடைபெற்றது.

தொடர்ந்து உலக மக்கள் நன்மைக்காகவும், கல்வி, தொழில் மேன்மை, குழந்தை பாக்கியம், விவசாயம் மற்றும் நல்ல மழைப்பொழிவு வேண்டி 108 சங்க அபிஷேகம் மற்றும் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதில் ராசிபுரம் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த கோவில் சிறப்பு அலங்காரத்தை அர்ச்சகர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

தலைப்புச்செய்திகள்